Showing posts with label UM. Show all posts
Showing posts with label UM. Show all posts

Thursday, August 27, 2009

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் பெயர் மாற்றம், துணைவேந்தரின் அராஜகம். இன ஒழிப்புக்கு சமமானது.

மலேசியா வாழ் தமிழனை ஏதாவது ஒரு வழியில் சரிகட்டிவிடவேண்டும் என்பதுதான் இந்நாட்டு தேசிய மலாயா பல்கலைக்கழக துணை வேந்தரின் தலையாய கொள்கையோ?

எதற்காக இந்திய ஆய்வியல் துறை பெயர் மாற்றம் கண்டது? அதன் காரணம் என்ன?


முதலில் விளக்கத்தை தந்துவிட்டு அதன் பிறகு என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் அத்துறையின் விரிவுரையாளர்களின் மேல் குறை கூறி அதன் பெயரை மாற்ற துடிப்பது பல இந்திய சமுதாய மக்களின் பொறுமையை தீண்டிப்பார்ப்பதுபோல் தெரிகிறது.


இது பெயர்மாற்றமா அல்ல தமிழர்களை கொலை செய்வதற்கான முயற்சியா? கண்டிப்பாக இந்த பெயர் மாற்றத்தில் அரசியல் உள்நோக்கமும் உண்டு என்பதனை மறைக்காமல் சொல்லமுடியும். கால காலமாக கட்டிக்காத்த ஒரே ஒரு இந்திய ஆய்வியல் துறை, இன்று அதிகாரத்தின் அராஜகத்தால் பெயர் மாற்றம் கண்டது. இதன் விளைவு எதுவாகினும் அதனை நான் சந்திக்கத் தயார் என்று பேசும் பொழுதே தெரியவில்லையா இதற்க்கு பின்னாடி யாரோ ஒருவர் இதற்க்கு பக்க பலம் என்று.


ஒரு துணை வேந்தர் என்பவர் ஒரு முடிவை எடுக்கும் பொழுது அனைத்து அம்சங்களையும் ஆழமா ஆராய்ந்துதான் ஒரு முடிவை எடுக்க முயலவேண்டும். அதிலும் ஒரு சமுதாயத்தின் சின்னமாக விளங்கும் ஒரு துறையின் பெயரை மாற்ற முடிவெடுப்பது, அந்த இனத்தை கொலைசெய்யும் அளவிற்கு சமமானது.

எதனால் இந்த முடிவு?

எத்தனை மகஜர், எந்தனை குமுறல்கள், எந்தனை விமர்சனங்கள், எந்தனை சந்திப்புகள்; இவைகள் அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல ஆகிவிட்டது.


இந்திய துணை அமைச்சர்களின் சந்திப்புகள், கல்வி அமைச்சரின் வாக்குறுதிகள் எல்லாம் என்னவானது?


சமீபத்தில் அரசு சார்பற்ற இயக்கங்கள், பிரதமரிடம் ஒரு மகஜரை சமர்ப்பணம் செய்தனர்....அதற்க்கு கிடைத்த அங்கிகாரம் தானோ இது.

ஆரம்ப கட்டத்தில் வாயை மூடிய வாறு இருந்து, அந்த துணை வேந்தரின் சொற்க்களை கேட்ட தலையாட்டி பொம்மைகளால் வந்ததுதான் இந்த விணை.
இனியும் பொறுத்திருந்தால் முட்டாள் ஆகிவிடுவோம்.

இதற்க்கு என்னதான் வழி. அந்த ஆராஜக துணை முதல்வரை உடனே பணிநீக்கம் செய்யவேண்டும். இல்லையேல், இந்திய சமுதாயம் மீண்டும் ஒன்று திரண்டு, நமது அடையாள சின்னத்தை காக்க ஒரு எழுச்சி பேரணியை உருவாக்க வேண்டும்.

மீண்டும் கூடுமா இந்த இந்திய சமுதாயம்?