Thursday, July 9, 2009

வருத்தம் கூடிய வாழ்த்துக்கள்

காலம் தமத்தத்துடன் அடையும் வெற்றி எந்த ஒரு பயனையும் தராது என்பதனை நாம் முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். இந்நாட்டில் வாழும் இந்தியர்களை அவமானப்படுத்தும் வகையில் தமிழர் அல்லாதவர் ஒருவரை நியமனம் செய்வதற்கு முன்னமே அதன் விளைவுகளை ஆராய மறுத்த காரணத்தை மலாயா பல்கலைகழகத்தின் துணை வேந்தர் தெளிவு படுத்தவேண்டும்.

தாம் பதவில் இருந்துக்கொண்டு அதன் அதிகாரத்தை சொந்த விருப்பதிற்கு ஏற்ப பயன்படுத்தகூடாது. இந்தியர் ஆய்வியல் துறையில் பல பிரச்சனைகள் இருக்குமாயின் அதனை முதலில் முழுமையாக விசாரணை செய்த பிறகுதான் எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டு வர வேண்டும்.

ஒரு பதவில் இருந்துக்கொண்டு செய்த தவற்றை அறிந்து மன்னிப்பு கேட்பதில் எந்த ஒரு பயனும் கிடையாது. எந்த முடிவானாலும் ஒரு சமுகத்தையும் பாதிக்காமல் இருக்க சிறப்பான முறையில் பனி புரியவேண்டும்.

தற்பொழுது நிகழ்ந்து கொண்டிருக்கும் பிரச்சனையை பார்த்தல், மலாயா பல்கலைகழக துணை வேந்தர்தான் முதலில் இடை நீக்கம் செய்யவேண்டும், காரணம் ஒரு பிரச்சனையை தீர்ப்பதாக சொல்லி புதிய பிரச்சனையை உருவாக்கியதற்காக.

சமீபத்தில் ம.இ.க வுடன் நடத்திய சந்திப்பு கூட்டத்தில், அத்துனை வேந்தர் இது ஒரு தற்காலிக நியமனம் என்றும் மறு நியமனம் கூடிய விரைவில் அதுவும் ஒரு தமிழர் தான் அப்பதவிக்கு நியமனம் பெறுவர் என்றும் செய்திகள் வெளிவந்தன.

அது ஒரு பக்கம் மகிழ்சி தந்திருந்தாலும், இந்திய மக்கள் உணர்வை உரசிப்பார்த்த அந்த துணை வேந்தர் இந்தியர்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகள் மீண்டும் உதயமாகாமல் பாதுகாத்துக்கொள்ள அரசாங்கம் உறுதியளிக்க வேண்டும்.