Sunday, August 9, 2009

உண்டா நேர்மை அரசியலில்? சொல்லுங்கள்

நம் நாட்டில் எல்லாம் உண்டு. இந்தியனுக்கு உண்டு என்பது மட்டும் தான் உண்டு. என்ன உண்டு என்பதை உன்னித்து பார்த்தால் உள்ளது விளங்கும்.

ஒரு சில குடும்பங்களில் பஞ்சம் என்பது இன்னும் உண்டு. அதனை பெரிது படுத்தாமல் கல்வியில் முன்னேறும் மாணவர்களும் உண்டு.

இதையெல்லாம் மீறி இப்பொழுது நமக்கு நிறைய கட்சிகள் உண்டு ஆனால் நேர்மையான அரசியல்வாதிகள் உண்டா? இல்லை. நமக்கு காமராஜ் போல தலைவர்கள் தேவையில்லை, மாறாக மக்கள் நலன் காக்கும் தலைவன் போதும்.

இன்றைய நாள் வரை, நமது உறவுகள் ஆரம்ப பள்ளிகளில் இன்னமும் 50 காசுக்கு மெல்ல கொண்டு போவதில்லை. ஆனால் பல அரசியல்வாதிகள் தமது அலுவலக செலவுகளை கவனிப்பதற்கு, பெரிய அளவில் விருந்து உபசரிப்பு செய்து, அதில் வரும் லாபத்தில் கும்மாளம் போடுகிறார்கள்.

தேர்தல் களத்தில் இறங்கும் முன் ஒரு பேச்சு, இறங்கிய பிறகு ஒரு பேச்சு அதன் பிறகு வெற்றி கண்டவுடன் எல்லாம் மறந்து போச்சு? நேர்மையான அரசியல் வாதிகள் மலேசியாவில் இருக்கிறார்களா? இருக்கிறார்கள் !!!!!!! அனால் அவர்கள் தமிழர்கள் கிடையாது.

இருந்தார்களா? என்று கேட்டால்... பதில்...... இருந்தார்கள் ஆனால் இப்பொழுது அவர்கள் கிடையாது. இந்த நேர்மையானவர்களின் அரசியல் சுவடிகளை படித்தவர்கள் யாரும் இல்லையா? இருக்கிறார்கள்... ஆனால் சுயநலவாதிகளாக உள்ளனர்.

தற்பொழுது இருக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் தமது பெயர் சரித்திரத்தில் இடம் பெற நிறைய பாடுபடுகிறார்கள். இவர்களின் உண்மை குணம் வெளிச்சத்துக்கு வந்தால் இவர்களின் சரித்திரம்.... தர்தரியம் நிரம்பி விடும்.

ஒரு சில நேரங்களில் இந்த வீணாப்போன அரசியல்வாதிகளை சொல்லி எந்த புண்ணியமும் இல்லை காரணம், மக்களுக்கு யாரை தேர்தெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் போய் விட்டது.

ஆனால் ஒன்று, அந்த விழிப்புணர்வு மட்டும் நம் மக்களுக்கு இருந்தால், இந்த சுய நல அரசியல்வாதிகளின் கதி அதோகதிதான்.

அட இதாவது ஒரு வழியில் பருவாயில்லை, பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களும் நிபுணர்களும், ஒரு சில அரசியல்வாதி கூட சேர்ந்துக்கிட்டு அடிகிற ஜால்ரா இருக்கே....அடேங்கப்பா தாங்க முடியில.

ஆனால் பேச்சுக்கு பேச்சு நான் உணர்வாளன், யார் உணவிலும் மண்ணைவாரி போட மாட்டேன் என்கிற பேச்சு சற்று மக்களை சிந்திக்க வைக்கிறது.

இப்ப என்ன நடக்குது, வீதிக்கு வீதி பொய் பேச்சு. ஒரு தாய் மக்கள் இன்று ஒருவர் தலையில் ஒருவர் மண்ணைவாரி போடும் நிலை. கேவலமாக உள்ளது இந்த நிலையில்லா மனிதர்களை பார்கும் பொழுது.

எப்பொழுதுதான் மாறும் இந்த அவல நிலை? இதை படிப்பவர்கள் சொல்லட்டும் பதில்....

No comments: