Thursday, December 3, 2009

இனம் வாழ மொழி காப்போம், இலக்கியம் காக்க கைகோப்போம்

ஓம்

வாழ்க தமிழ் வளர்க இலக்கியம்

வீழ்வது நாமாயினும் வெல்வது நம் தமிழ் மொழியாக இருக்கட்டும்!

வணக்கம்,

தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு இலக்கியம் மிகவும் இன்றியமையாதது. முகவரி இல்லாமல் ஒருவனால் சமூகத்தில் எவ்வாறு வாழமுடியாதோ அத்தகைய முக்கியம் வாய்ந்தது இலக்கியம்.

ஆனால் அந்த இலக்கியம் எவ்வகையில் சமூகத்தின் மத்தியில் எடுத்துச் செல்லப்படுகின்ரது என்பதைப் பொறுத்தே அச்சமூகத்தின் முன்னேற்றத்தில் அதன் பங்கு நிர்ணயிக்கப்படும்.

வளரும் தலைமுறையின் தேவைகளைப் பிரதிபலிப்பதாக இலக்கியம் அமையவேண்டும்.நமது சமூகத்தின் கலாச்சாரங்கள் சுமையாக ஏற்றப்படாமல், சுகமாக ஏற்றப்படவேண்டும். மாற்றங்களை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்டு அதைப் பக்குவமாக இலக்கியத்துடன் இணைத்துக் கொள்ளவேண்டும்.

தர்காலத்தில் நமது சமூகம் உலகம் முழுவதும் பரந்து வியாபித்திருக்கின்றது. தாய்நாட்டின் தமிச்சமூகத்திர்கும், புலம்பெயர் நாட்டின் தமிழ்ச்சமூகத்திற்கும் இலக்கியம், மொழி தான் பாலமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது, இனியும் இருக்கும்.

இதன் தொடர்ச்சியான வளர்ச்சி புலம்பெயர் மக்கள் அந்தந்த நாட்டு மொழிகளில் நமது கலாச்சாரத்தை, இலக்கியத்தை எடுத்துச் செல்வதன் மூலமே ஆரோக்கியமானதாக அமையும் என்பது என்னுடைய கருத்து.


"இனம் வாழ மொழி காப்போம், இலக்கியம் காக்க கைகோப்போம்”

“தமிழ் இலக்கியம் வளர கையொப்பமிட்டு கைகோப்போம்”

நன்றி.

இப்படிக்கு
வ. சிவகுமார்

No comments: