Thursday, December 3, 2009

கற்றலுக்கு தடை வேண்டாம்

அண்மையில் நமது கல்வி அமைச்சு பத்து பாடங்கள் மட்டுமே என்ற கட்டுப்பாடு தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் மறைமுகமாக வளர விடாமல் தடுக்கும் முயற்சி மீண்டும் சில அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நாட்டு கல்வியின் வளர்ச்சிக்கு ஏணிப்படியாக இருக்க வேண்டிய அரசாங்கம் இந்தியர்களுக்கு தடை கல்லாக உருவம் எடுப்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்று.

ஒரு மொழியின் வளர்ச்சியை தடுப்பவன் மனிதனாக இருக்க தகுதியற்றவன். எந்த தமிழனும் தனது மொழியை வளர விடாமல் தடுக்கும் எவனுக்கும் அடிப்பணிய மாட்டார்கள் என்பதனை இந்த அரசாங்கம் மீண்டும் மறந்து விட்டது. தமிழை தாழ்த்த நினைப்பவர்கள் கூடிய விரைவில் மண்ணை கவ்வும் நேரம் நெருங்கி விட்டது. தமிழ் மொழியை தொரடர்ந்து கற்பதற்கு தடை விதிப்பதற்கு இவர்கள் யார்?

ஆரம்ப கட்டத்தில் தமிழ் பள்ளிகளின் வளர்ச்சியில் இந்நாட்டு இந்திய சமுதாயம் பல இன்னல்களை அனுபவித்தது. "ஐந்தாம் படிவ பரிட்சையில்" பத்து பாடங்கள் மட்டுமே என்பது திடீர்ரென்று கட்டாயமாக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பல உணர்வுள்ள தமிழர்களின் குரல் ஆங்காங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்நாட்டில் தீவீர தமிழ் ஆர்வாளர்கள் பலர், இந்த அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து பல போரட்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.

மக்களின் உணர்வை மதித்து தேசிய முன்னணி அரசாங்கம் உடனடியாக கல்வி அமைச்சின் முடிவை மாற்றி அமைக்க வழி செய்ய வேண்டும். இல்லையேல் இதன் விளைவுகள் கடந்த போராட்டத்தை விட பெரிய அளவில் உருவெடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதனை மனதில் கொள்ள வேண்டும். தமிழ் பாடத்திற்கு தடை தேசிய முன்னணியின் அரசியல் நோக்கமாகும், இலக்கியம் மிகுந்த ஒரு சமுதாயத்தின் மீது அல்லது தமிழ் இலக்கியம் மீது தேசிய முன்னணி வெறுப்பை தெரிவிப்பதனை இதன் வழி மிக தெளிவாக உணர முடிகிறது.

தமிழ் பாடம் வழி பலன்பெறும் அல்லது அத்தமிழ் இல்லாமல் அவதிப்படும் மாணவர்களுக்கே புரியும் இத்தமிழின் அருமை. அதனை கல்வி அமைச்சு நன்கு உணர வேண்டும். தமிழ் மற்றும் அதன் இலக்கியத்தில் தொடர்பில்லாதவர்கள் அதனை மாணவர்கள் எடுக்காமல் தடை விதிப்பது ஏற்புடையது அல்ல. தாய் மொழி பாடத்தை தவிர பிற மொழி பாடத்தில் தடை விதித்தால் என்ன பாதிப்பு வருமோ அதே பாதிப்பு இந்திய மாணவர்கள் எதிர்நோக்க கூடும்.

கூடுதல் பாடங்களை மாணவர்கள் எடுப்பது தவறா? பாவ செயலா? உலகமயமாக்கலின் பலன்களை அனுபவித்து வரும் இந்த காலத்தில், கற்றலுக்கு தடை விதிப்பது கட்டுப்பெட்டித்தனம் இல்லையா? கல்விக்கு ஏது எல்லை, கற்கும் சூழலும் வாய்ப்பும் திறமையும் இருக்கும் மாணவர்கள் கற்கட்டும், அதனை தடுக்கக் கூடாது. அதும் மட்டும் அல்ல கூடுதல் பாடத்தை எடுக்கும் மாணவர்களுக்கு எந்த ஒரு கெடும் வந்துவிடாது.

இந்நாட்டு அரசாங்கம் தமிழ் மொழி மற்றும் அதன் இலக்கியத்தின் தொன்மையை, பெருமையை மறந்துவிடக் கூடாது என்பதனை மட்டும் நினைவில் கொண்டு, கற்றலுக்கு ஆணை போடாமல், இந்திய மாணவர்கள் முறையாக தமிழ் மொழியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல வகை செய்ய வேண்டும்.

நன்றி.

No comments: