Sunday, August 9, 2009

உண்டா நேர்மை அரசியலில்? சொல்லுங்கள்

நம் நாட்டில் எல்லாம் உண்டு. இந்தியனுக்கு உண்டு என்பது மட்டும் தான் உண்டு. என்ன உண்டு என்பதை உன்னித்து பார்த்தால் உள்ளது விளங்கும்.

ஒரு சில குடும்பங்களில் பஞ்சம் என்பது இன்னும் உண்டு. அதனை பெரிது படுத்தாமல் கல்வியில் முன்னேறும் மாணவர்களும் உண்டு.

இதையெல்லாம் மீறி இப்பொழுது நமக்கு நிறைய கட்சிகள் உண்டு ஆனால் நேர்மையான அரசியல்வாதிகள் உண்டா? இல்லை. நமக்கு காமராஜ் போல தலைவர்கள் தேவையில்லை, மாறாக மக்கள் நலன் காக்கும் தலைவன் போதும்.

இன்றைய நாள் வரை, நமது உறவுகள் ஆரம்ப பள்ளிகளில் இன்னமும் 50 காசுக்கு மெல்ல கொண்டு போவதில்லை. ஆனால் பல அரசியல்வாதிகள் தமது அலுவலக செலவுகளை கவனிப்பதற்கு, பெரிய அளவில் விருந்து உபசரிப்பு செய்து, அதில் வரும் லாபத்தில் கும்மாளம் போடுகிறார்கள்.

தேர்தல் களத்தில் இறங்கும் முன் ஒரு பேச்சு, இறங்கிய பிறகு ஒரு பேச்சு அதன் பிறகு வெற்றி கண்டவுடன் எல்லாம் மறந்து போச்சு? நேர்மையான அரசியல் வாதிகள் மலேசியாவில் இருக்கிறார்களா? இருக்கிறார்கள் !!!!!!! அனால் அவர்கள் தமிழர்கள் கிடையாது.

இருந்தார்களா? என்று கேட்டால்... பதில்...... இருந்தார்கள் ஆனால் இப்பொழுது அவர்கள் கிடையாது. இந்த நேர்மையானவர்களின் அரசியல் சுவடிகளை படித்தவர்கள் யாரும் இல்லையா? இருக்கிறார்கள்... ஆனால் சுயநலவாதிகளாக உள்ளனர்.

தற்பொழுது இருக்கக் கூடிய அரசியல் தலைவர்கள் தமது பெயர் சரித்திரத்தில் இடம் பெற நிறைய பாடுபடுகிறார்கள். இவர்களின் உண்மை குணம் வெளிச்சத்துக்கு வந்தால் இவர்களின் சரித்திரம்.... தர்தரியம் நிரம்பி விடும்.

ஒரு சில நேரங்களில் இந்த வீணாப்போன அரசியல்வாதிகளை சொல்லி எந்த புண்ணியமும் இல்லை காரணம், மக்களுக்கு யாரை தேர்தெடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் போய் விட்டது.

ஆனால் ஒன்று, அந்த விழிப்புணர்வு மட்டும் நம் மக்களுக்கு இருந்தால், இந்த சுய நல அரசியல்வாதிகளின் கதி அதோகதிதான்.

அட இதாவது ஒரு வழியில் பருவாயில்லை, பல துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்களும் நிபுணர்களும், ஒரு சில அரசியல்வாதி கூட சேர்ந்துக்கிட்டு அடிகிற ஜால்ரா இருக்கே....அடேங்கப்பா தாங்க முடியில.

ஆனால் பேச்சுக்கு பேச்சு நான் உணர்வாளன், யார் உணவிலும் மண்ணைவாரி போட மாட்டேன் என்கிற பேச்சு சற்று மக்களை சிந்திக்க வைக்கிறது.

இப்ப என்ன நடக்குது, வீதிக்கு வீதி பொய் பேச்சு. ஒரு தாய் மக்கள் இன்று ஒருவர் தலையில் ஒருவர் மண்ணைவாரி போடும் நிலை. கேவலமாக உள்ளது இந்த நிலையில்லா மனிதர்களை பார்கும் பொழுது.

எப்பொழுதுதான் மாறும் இந்த அவல நிலை? இதை படிப்பவர்கள் சொல்லட்டும் பதில்....

எதற்கு பெரிய உருவப்படம்

பத்து கேவ்ஸ் முருகனை விட பெரிய ஆளு, நம்ம ஆளு நடராஜா.
ஒரே மலேசியா கொள்கையை மனதார ஏற்று....கொள்கைவாதியான நஜிப்பை தாங்கி இன்னும் எவ்வளவு சொரண்ட இந்த சதி நாச வேலையோ...?

தேவைதானா இந்த சர்ச்சைக்கு உட்பட்ட கட் அவுட்?.........அதுவும் இவ்வளவு உயருத்துக்கா, யாரு குடி கேடபோதோ...

தமிழன் ஒரு சில நேரத்துல எல்லாத்தையும் சரியா செய்வான்....தலைகனம் வந்தாச்சுனா தலைகால் தெரியாம ஆடுவான் என்று சொல்வதற்கு இது ஒரு உதாரணம்.

அன்றைய நாள் முருகன் சிலை மிக கம்பிரமாக தோற்றம் கண்ட பொது எத்தனை சர்ச்சைகள் உருவாக்கினார்கள். எதிரே உள்ள சாலையில், இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்பொழுது தீடீர் பயம் தரும் அளவிற்கு உயரமாக இருக்கிறது என்றார்கள்...எம்பெருமான் முருகனை பார்த்து...இன்று பருவாயில்லையா... இல்ல பயம் வரலையா...

இந்த ராட்சச உருவப்படத்தை பார்த்தால்தானே பயம் வர வேண்டும் மக்களுக்கு, என்ன சொல்லுறது விளங்குதா. (நினைவுள்ளதா மங்கோலியா அழகி)

Saturday, August 8, 2009

Memorandum submitted to ADO


Yesterday (07/08/09) the DAP Jelapang Service Team made a delegation together with the Jelapang Tambahan Baru farmers who complained that their farming and live stock breeding area were partially been destroyed by Developer without giving any prior notice.

Jelapang Service Team Chairman Frankie Wong, arranged for the delegation to safe guard the welfare of the farmers who been affected with the development. The delegation was accompanied by Ipoh Barat MP M.Kulasegaran, Human Rights Lawyer Augustine Anthony and the JST members.

ஒருவரின் மரணத்தில் இன்னொருவர் விளம்பரம் தேடுவதா?

எத்தனை மகாத்மாக்கள் வந்தாலும் இந்த இந்திய சமுதாயம் மாறது ஐயா மாறாது......!!!!!! கேவலத்தின் சின்னம் நாம்......வெட்கம் என்பது கிடையாதா?

ஒருவரின் துன்பம் இன்னொருவருக்கு லாபத்தை தருகிறது. அது கட்டாய சூழ்நிலை.

பிணத்தை வைத்து அரசியல் விளம்பரம் தேடும் ஒரு சில அரசியல் வாதிகளை என்னென்று சொல்லி அழைப்பது?

சமிபத்தில் உயிர் இழந்த நமது மனித உறவுகளுக்கு நமது துயரத்தையும் இரங்கலையும் முதலில் தெரிவித்துக்கொள்வோம். ஆனால் அந்த உயிர் பிரிந்த உடலை வைத்து சுய அரசியல் விளம்பரம் செய்ய வேண்டாம், அதுவும் நீதிக்காக தான் போராட்டம் என்று கூறுவதையும் நிறுத்திக்கொள்ளவும்.

நீதி தேவதை உங்கள் கண்முன் உதயமானால் கண்டிப்பாக கொள்கையில்லா அரசியல்வாதிகளுக்கு செருப்படி விழும் சாத்தியம் உள்ளது. நீதி தேவதை வரமாட்டாள் என்று தானே இந்த அரசியல் ஆட்டமெல்லாம்.

இது போன்ற செயல் , நாம் காலம் காலமாக சேர்த்து வைத்த பண்பாட்டிற்கே விரோதமானது. உண்மையான உணர்வுள்ள தமிழன் என்றால் இது போன்ற இறப்பு நாம் அனைவரையும் மன உளைச்சலை கொடுத்து மற்றும் மரணத்தின் மீது அரசியல் லாபம் தேடும் இரக்கமற்ற சுய நலம் கொண்ட அரசியல்வாதி மீது வெறுப்பை தோற்றுவிக்கும்.

ஏற்கனவே தேசிய முன்னணி தமிழன் சோற்றில் மண்ணைவாரி போட்டுவிட்டது என்றால்....... மாற்று கூட்டணி, மீதி இருக்கிற மண்ணை வாயிலேயே திணித்துவிடும் அளவிற்கு இருக்கிறது. என்ன கொடுமை.

அண்மைய கால அறிவிப்புகள், மக்களிடையே எரிச்சலை உருவாக்குகிறது....... மறந்து விடவேண்டாம்.......

"இது எச்சரிக்கை அல்ல மக்களின் புலம்பல்களில் ஒன்று"

(இதன் மரைமுகமான செய்தி ஒரு சில அரசியல்வாதிகளுக்கு சேர வேண்டும் என்பதனை இதன் வழி தெரிவித்துக் கொள்கிறேன்)

Tuesday, August 4, 2009

மாநில ரீதியில் தேர்தல் மானத்தை வாங்கிவிடும்

இருக்கும் பிரச்சனைகள் இன்னும் எதுவும் மக்களுக்கு தோதாக இல்லை எனலாம். சமீபத்தில் அரசியல் செயலாளரின் இறப்பு, கம்போங் புவா பாலா நில விவகாரம் அனைத்தும் தேசிய முன்னணிக்கும், மக்கள் கூட்டணிக்கும் பெரிய பாதிப்பை உண்டு செய்யும் என்பது சொல்ல வேண்டிய கருத்தாகும்.

மலேசியா மண்ணில் இந்தியர்களின் நிலை குறித்து எந்த சாமி பேச முன்வந்தாலும், அந்த சாமி (சுயநலவாதிகள்) எந்த போர்வையில் தன்னை மறைத்து கொண்டு வருது என்பதை மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். சுருக்கமாக சொல்லபோனால் அந்த சாமி ஒரு அரசியல் ஆசாமி எனலாம்.

இந்தியர்களின் வாழ்கையை தீர்மானிப்பவர்கள் நமக்கு இனி நாமாகத்தான் இருக்க முடியுமே தவிர எந்த பச்சத்திலும் அரசியல்வாதிகளாக இருக்க முடியாது. ஒரு குழப்பமான பிரச்சனைக்கு விடை கேட்க சென்றால், உடனேயே நம்மை தெருவில் கொண்டு சென்று, பத்திரிகை வழி சுய அரசியல் விளம்பரம் தேடிவிடுகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன வென்றால், மீண்டும் பெரியளவில் பேரணி நடத்தவேடும் என்ற இன்னொரு குண்டையும் அள்ளி போடுகிறார்கள்.

"ஐயா சுயநல அரசியல்வாதிகளே தயவுசெய்து, எதையும் செய்வதற்கு முன்பு சற்று சிந்தித்து செயல்படுங்கள். உங்களை நம்பி ஒட்டு போட்ட மக்களை மூலையில் அமரவைத்து ஒப்பாரி விடும் அளவிற்கு கொண்டுசெல்லாதீர். இன்றைய வரைக்கும் உங்கள் மனைவி மற்றும் குடும்ப மக்கள் எந்த ஒரு வீதி பேரணியில் கலந்துகொண்டதுண்டா? இல்லாதவர்கள் என்றால் அவ்வளவு கேவலமா? இல்லாதவர்கள் வயித்தில் நெருப்பை அள்ளி கொட்டாதீர். "

இந்நாட்டில் பதவிக்கும் பட்டத்திற்கும் அலைபவர்கள் மக்கள் கூட்டணியிலும் உண்டு. அதற்க்கு நிறைய கைவசம் உன்டு சொல்ல . ஆனால் புண்ணியமில்லை.
அதனை சொல்லித்தான் தெரிய வேண்டும் அவசியமில்லை. சொல்லாமலே நிறைய மக்கள் அதனை அறிவார்கள்.

இன்று ஒவ்வொரு உணர்ச்சி உள்ள தமிழன் மனதில் கம்போங் புவா பால நிலப் பிரச்சனை ஓசையிட்டு கொண்டிருக்கிறது. அதுவும் மக்கள் கூட்டணி மாநிலத்தில்.
எங்கு சென்றனர் மக்கள் கூட்டணியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள்? காணாமல் போய்விட்டார்களா அல்லது மக்கள் முகத்தை பார்க்க தைரியம் இல்லையா? கிடைத்த தகவல் படி தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே அங்கு சென்று வருவதாக தகவல் வந்தது. மிகவும் சந்தோசம், ஆனால் மற்றவர்கள் எங்கு சென்றார்கள்?

கைதொலைப்பேசி மணி அடித்தவன்னமே இருக்கிறது ஆனால் அதில் யாரும் பதில் பேசுவது கிடையாது. ஒருசிலர் "இந்த பிரச்சனையை பற்றி நான் நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்பினேன்" என்று சொன்னவர்கள் இன்று நாட்டிலேயே இல்லையாம். இது எப்படி இருக்கிறது.
மக்கள் கூட்டணி என்ற ஒரு நல்ல சிறந்த பெயரை வைத்துக்கொண்டு, இன்று மக்களை கோமாளிகளாக ஆக்கிவிட்டார்கள்.

தனக்கே தகராறா இருக்கு, இதில் பொது மறு தேர்தலா? பேஷ் பேஷ்......கொஞ்ச நெஞ்ச மானமும் கூடிய விரைவில் கப்பல் ஏறி போகப்போது.

இந்நாட்டில் எந்த நாளும் மக்கள் பங்கு பெறாத புரட்சி வென்றதாக சரித்திரமில்லை? இந்ட்ராப் நினைவுள்ளதா? சரித்திரம் படைத்தது..... அது போல எல்லா பேரணியும் சரித்திரம் படைக்கும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம். அது பொதுநல குணங்கொண்ட தலைவனாலே மட்டுமே முடியும். அரசியல் வதந்திகளை பரப்பும் அரசியல்வாதிகளால் முடியாது (ஒரு சிலர்).

போராட்டம் நடத்தும் மக்களை கண்டு ஏமாளி என்று சொல்லும் குணங்கொண்ட தலைவன் நமக்கு தேவையில்லை.போராட்ட குணங்கொண்ட மக்கள் நலவாதிகள் தான் நமக்கு தேவை.
அரசியல் கொள்கை இனி தேவையில்லை காரணம் கொள்கையில் பல கோளாறுகள்.அரசியலை வெளிதோற்றமாகவும் மன தர்மத்திற்கு கட்டுப்பட்டவனாக உள்ள தலைவன்தான் இனி மக்கள் தலைவனாக முடியும் என்பதனை மறந்துவிடாதீர். மக்கள் அதனை அறிவார்கள்.

”ஒருவன் கத்தியில் குத்த வரும்போது அந்த நொடியில் உயிர் காக்க அவனை தாக்குவதை விட அவன் கத்தியை தையிரியமாக எதிர்த்து நிற்க்க தான் அதிகமான மன உறுதியும் தையிரியமும் வேண்டும் – ஆனால் நான் உங்களை கத்தியில் குத்து வாங்கி சாக சொல்லவில்லை” போராட்டம் மனதில் பிறந்து, ஒருவரிடமிருந்து ஒருவராக வளர வேண்டும். அதனை வளர்த்துவிட்டால் வெள்ளி மாநிலத்தில் மறுதேர்தலை மக்கள் கூட்டணி சந்தித்து வெற்றி வாய்ப்பை அடையும் நிலை சாத்தியம்.

ஆனால் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த ஆண்டி போல ஒரு சில அரசியல் கோணங்கிகள் தேர்தல்..... தேர்தல்...... என்று ஓலமிடுவது நல்லதல்ல. நினைவில் கொள்ளவும்.